விழாமல் காப்பது எப்படி? பெல்ட் எண் # 1 உபவாசம்( பாகம் 1)

மற்றவர்கள் வாழ்க்கையிலும், நம்முடைய சொந்த அனுபவங்களிலும் நாம் உற்று நோக்கும் போது , உயர்த்தப்பட்ட காலகட்டத்திலும் காரியங்கள் எல்லாம் சாதகமாக வாய்க்கும் போதும்  கொடிய பெருமையானது வெளிப்படுகிறதை நாம் அறிய முடியும். மறுபுறம், சில சமயங்களில், வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளும் தேவன் மீது உள்ள அன்பை இழக்கச் செய்து அவரை மறக்க செய்கின்றது.இந்த இரண்டு சூழ்நிலைகளும் நம்மை தேவனிடமிருந்து பின்வாங்க செய்கின்றன. நாம் விரைந்து விழித்தெழுந்து சீர் பொருந்தாவிட்டால் ‘உண்மையான விசுவாசி’ என்ற நிலையிலிருந்து நாம் விழுந்துவிடுவோம்.


இத்தகைய வீழ்ச்சியடையாமல் நம்மை தற்காத்துக்கொள்ள பல்வேறு வழிகளில் ஒன்று இங்கே:பெல்ட் எண் 1 # உபவாச பழக்கம், கடமைக்காக அல்ல (பாகம் 1)

உபவாசம் எப்படி நம்மை தற்காக்கும்?

‘இதோ, அகங்காரியாயிருக்கிறானே, அவனுடைய ஆத்துமா அவனுக்குள் செம்மையானதல்ல’

– ஆபகூக் 2: 4

மேற் சொல்லிய வசனத்திலிருந்து பெருமையானது ஆத்துமாவிலிருந்தும் எழுகிறது என்பதை அறிகிறோம். ஆக, நம் ஆத்துமாவை எப்படி நாம் சரி செய்வது? வழி இங்கே-

‘நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரப்படுத்தினேன்’

– சங்கீதம் 35 : 13.

ஆகவே ,உபவாசத்தினால் நம் ஆத்துமாவை( மனது, சித்தம், உணர்ச்சி ) நாம் தாழ்த்தும் போது பெருமையிலிருந்து விழாமலும், மாம்சத்தின் கிரியைகளை நிறைவேற்றாமலும் இருப்போம்.

மாம்சத்தின் கிரியைகள் யாவை?

மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே

– காலத்தியர் 5:19-21

எப்பொழுதெல்லாம் மாம்சத்தின் கிரியைகள் நம்மிலிருந்து எழும்புகிறதோ அப்பொழுதெல்லாம் உபவாசமானது அவைகளை எதிர்த்து போர் செய்கிறதாயும், அவைகள் நம்மை ஆண்டு கொள்ள விடாமல் நம்மை காப்பாற்றுகிறதாயும் இருக்கின்றது. உபவாச நேரங்களில் நம் ஆவியானது (ஆவி -தேவனோடு தொடர்புடையது) நம் சரீரத்தையும் நம் ஆத்துமாவையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. எனவே உபவாச பழக்கம் நமக்கு மிகவும் அவசியம்.

-தொடரும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.